Friday 12 April 2019

அன்பை விதைப்போம்

❤இன்றைய சிந்தனை,( 12.04.2019)
...........................................

''அன்பை விதைப்போம்..''
...........................................

வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது எது?. "அன்பு" மட்டுமே உலகில் மாறாமல் இருகின்றது.

அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை .
அன்பு என்ற அந்த அற்புத மருந்து தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று சொல்வார்கள்.

அன்புதான் நம்மை அதிக மகிழ வைக்கும். இந்த உலகத்தில் நிலையானது அன்பு மட்டுமே.,

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான் ...

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, ''எந்த பொம்மை வேண்டும் என்றான் .

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து,அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான் .
அதற்கு சிரித்துக் கொண்டே அந்த முதலாளி,

'' உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான் ....

இது போதுமா..? என்று கவலையுடன் கேட்டான் ..

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே' " எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார் ...

சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான் .

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம்,

"அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக் கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா ", என்றான்

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு. அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை .நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம் தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும்.. அதை தடுத்து விட்டேன் .

மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்

என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கும்போது, இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்..

ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார். ....

ஆம்.,நண்பர்களே.,

வாருங்கள் நாம் செல்லும் இடம் எல்லாம் அன்பை விதைப்போம் .அன்பு செலுத்துவோம் அன்பை பெறுவோம்..🌹👏🌺

No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...