Thursday 28 March 2019

தமிழ் இலக்கணம்

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

4. யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2

RH GROUPS விதிமுறைகள்

♦♦♦♦♦♦♦♦
*_RH  GROUPS_*
*விதிமுறைகள்*:-
➖➖➖➖➖➖➖➖
VERSION - *20.3*.,
DATED:-
*25. 03. 2019*
♦♦♦♦♦♦♦♦
மொத்தம் உள்ள
*100*...
[ ✅ *_RH_* ✅ ]
குழுமங்களும்...
சிறப்பாக நிர்வகிக்கப்படும்...!

❌❌❌❌❌❌❌❌
*DON'T s*:-

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

1⃣. ❌ HAI.,
GOOD  MNG,
*ONLINE  OFFERs,*
GIF,
*CHENNAI  JOBS,*
*FORWARD  SMS*,
தீபாவளி,
கிறிஸ்துமஸ்,
ரம்ஜான்
வாழ்த்துக்கள்.,
மதம்..,
*NEGATIVE COMMENTS*
*OTHER*  *GROUPS*
*LINKS*.,
ADULT  SMS
அனுமதி இல்லை..!,
➖➖➖➖➖➖➖➖

2⃣.❌ *பெண்களுக்கு*
*எதிரான  செயல்பாடுகள்*,
*INDIVIDUAL  CHATs, CALLs*
அனுமதி இல்லை.!

( *EXCEPT  ADMINS* )
➖➖➖➖➖➖➖➖

3⃣. ❌ *இரண்டு  நாட்களுக்கு* மேல் செயல்படாமல்
அமைதியாக இருக்கும்
உறுப்பினர்கள்
*தினமும்*
முன் அறிவிப்பு
இல்லாமல்
திடீரென்று
*நீக்கப்படுவீர்கள்..!*
( OPERATION )

➖➖➖➖➖➖➖➖

4⃣. ❌ குழுவில்
தினமும்
*11* pm to *5* am..
நேரத்தில்
பதிவுகள்
அனுமதி இல்லை.!
இந்த நேரத்தில்
*_RH  GROUPS_*
*LOCK* செய்யப்படும்..!

[ *EXCEPT    ADMINS* ]..!
➖➖➖➖➖➖➖➖

5⃣. ❌ குழுவில் *+91*.....என
தொடங்கும்
*தமிழ்நாடு*
எண்கள் மட்டுமே அனுமதி..!✅

( *EXCEPT  ADMINS* )
📛📛📛📛📛📛📛📛
➖➖➖➖➖➖➖➖

✅✅✅✅✅✅✅✅

*DO's:-* ✅
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

6⃣. ✅
*குழுவின் TOPIC.க்கு  தொடர்பான பதிவுகள்  மட்டுமே  அனுமதிக்கப்படும்*..!
*அறிவிப்புகளை*
கவனியுங்கள்..!
➖➖➖➖➖➖➖➖

7⃣. ✅ குழுவில்
தொடர்ந்து
*ACTIVE* -ஆக
செயல்படுங்கள்..!
வெறுமனே
இடத்தை அடைத்துக் கொண்டு
செயல்படாமல் இருப்பவர்கள்
*_RH  GROUPS_*.க்கு
தேவையே *இல்லை..!*
➖➖➖➖➖➖➖➖

8⃣. ✅ சிறப்பாக
செயல்படும் நபர்களை
*உடனே*
பாராட்டுங்கள்,
POSITIVE COMMENTS,
SMILEYS,
*அனுமதி  உண்டு*,
💐👏🌹👌💃,
➖➖➖➖➖➖➖➖

9⃣. ✅குழுவில்
தேவையற்ற பதிவுகளை
அனுப்பிய பின்
*SORRY*,
*WRONGLY SENT*,
ஆகியவற்றை
*ஏற்க முடியாது*...!,

( *EXCEPT  ADMINS* )
➖➖➖➖➖➖➖➖

🔟. ✅ஞாயிறுதோறும்
*_RH  GROUPS_*
*ADMINS  MEETING*
நடைபெறுவதால்
*9 pm to 10 pm*
நேரத்தில் அனைத்து
*RH*  குழுக்களும்
ஓரு மணி நேரம்
*LOCK*  செய்யப்படும்..!
➖➖➖➖➖➖➖➖

*விதிமுறைகளை*
*மீறினால்*
*உடனடியாக*
*நீக்கப் படுவீர்கள்..!*
⬆⬆⬆⬆⬆⬆⬆⬆

*SERIOUSLY  FOLLOW*
*_RH  GROUPS  RULES_*..!
♦♦♦♦♦♦♦♦

உடல்நலம் காப்போம்

*🌹தினம் ஒரு மூலிகை🌹*

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

*🍁திங்கள் – அருகம்புல்☘*

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

*🍁செவ்வாய் – சீரகம்☘*

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

*🍁புதன் – செம்பருத்தி☘*

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

*🍁வியாழன் – கொத்துமல்லி☘*

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

*🍁வெள்ளி – கேரட்☘*

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

*🍁சனி – கரும்பு சாறு☘*

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

*🍁ஞாயிறு – இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_

RH  GROUPS

பத்து கோடி ரூபாய் பறிமுதல்

பல்லடம் அருகே பிடிபட்ட பணம் குறித்த அதிர்ச்சி தகவல் : காலை 9.50 மணிக்கு தேர்தல் பறக்கும் படை பல்லடத்தை அடுத்த கரடிவாவியில் வாகன சோதனை மேற்கொண்ட போது TN72 BB 9834 எண்ணுடைய டெம்ப்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்த போது 4 தகரப்பெட்டிகள் இருந்தது. அதில் TMB வங்கி முத்திரை இருந்தது. இதனை அடுத்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் போத்தனூரில் இருந்து தூத்துகுடிக்கு ரூபாய் 10 கோடி ரொக்கப்பணம் கொண்டு செல்வதாகவ்தெரிவித்தனர். ஆவணங்களை சரிபார்த்தபோது முன்னுக்குபின் முரணாக இருந்ததால் காலை 10.30 மணிக்கு பல்லடம் தாலுக்கா அலுவலகம் கொண்டுசெல்லப்பட்டு வேன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 மணி நேரம் ஆகியும் இது வரை எந்த ஒரு தகவலும் இன்றி பிடிபட்ட பணம் குறித்த விசாரணை நீடி...........க்க்கிறது.

Monday 25 March 2019

TTV தினகரனின் சின்னம் எது ?

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. அமமுக பதிவு செய்யப்பட கட்சி கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இதனால் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்க போகிறார், நாளை அவரது கட்சியின் வேட்பாளர்கள் எப்படி போட்டியிட போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.



முக்கியம்


தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாள். ஆனால் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தால் இன்னும் அமமுகவில் இருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்னும் ஒரு வேட்பாளர் கூட அமமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


விசாரணை


இந்த நிலையில் நாளை வழக்கு விசாரணையில் கண்டிப்பாக குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டிடிவி தினகரன் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். 99.9 சதவிகிதம் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கொண்டு இருக்கிறார். வழக்கு விசாரணையில் நாளை முக்கிய திருப்பம் வரும் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.


நாளைத்தான்


நாளைதான் அமமுக வேட்பாளர்கள் எல்லோரும் வேட்புமனுதாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த வழக்கில் நாளை உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின் இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இல்லையென்றால் இவர்கள் எல்லோரும் தனியாக சுயேட்சையாக தேர்தலில் நிற்க முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


என்ன புதிர்


ஆம், ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்காத பட்சத்தில், அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அதற்கு என்று தனியாக பொது சின்னம் வழங்கப்படாது. இதனால் வேட்பாளர்கள் எல்லோரும் சுயேட்சையாக தேர்தலில் நின்று போட்டியிடுவார்கள். இவர்களுக்கு தனியாக சின்னம் வழங்கப்படும். நாளை மதியத்திற்குள் இந்த புதிருக்கான விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday 20 March 2019

கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

பட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி...

20 வயதான கல்லூரி மாணவியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 18 வயது இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவின் கோட்டயம் பகுதியில் இன்று காலை 20 வயதான கவிதா விஜயகுமார் என்ற பெண் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞன் ஒருவன் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது வாக்குவாதம் பெரிதாக, திடீரென அந்த இளைஞன் தனது கையில் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.

80 சதவீத தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவல்லாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் கும்பநாடு பகுதியை சேர்ந்த அஜின் ரெஜி மேத்யூ என்ற அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த பெண்ணை அவன் காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அவன் தெரிவித்துள்ளான்.

மேலும் அந்த இளைஞனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று பொள்ளாச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

🔵⚪ *RH  NEWS  MEDIA:*

*பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு .*

*தூத்துக்குடி - தமிழிசை*

*கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்*

*கோவை -சி.பி. ராதாகிருஷ்ணன்*

*சிவகங்கை - ஹெச்.ராஜா*

*ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்*

Tuesday 19 March 2019

இன்றைய முக்கிய செய்திகள்


Today Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்

Samayam Tamil | Updated Mar 19, 2019, 08:21 PM IST

நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம். தோ்தல் அறிக்கையை ஒரே நாளில் வெளியிட்ட திமுக, அதிமுக. தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல செய்திகளின் சுருக்கம் உங்களுக்காக.

நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம். தோ்தல் அறிக்கையை ஒரே நாளில் வெளியிட்ட திமுக, அதிமுக. தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல செய்திகளின் சுருக்கம் உங்களுக்காக. 

TAMIL NEWS HEADLINES

தமிழகத்தில் களமிறங்கும் பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியாகிறது பட்டியல்!Mar 20, 2019, 07:22 AM IST


Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/03/2019): முயற்சிகள் கை மேல் பலன் தரும்Mar 20, 2019, 01:04 AM IST


Samayam Tamil Poll : 18 தொகுதிகள் யாருக்கு? உங்கள் விருப்பம் என்ன?Mar 15, 2019, 12:11 PM IST


மக்களவைத் தோ்தல்: தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பவா்ஸ்டாா்Mar 20, 2019, 12:17 AM IST


Chennai Super Kings: ‘தல’ தோனி தலைமையில் மறுபடி மரண மாஸ் காட்டுமா : சென்னை அணியின் முழு அட்டவணை!Mar 19, 2019, 06:12 PM IST


CSK vs RCB IPL 2019: வெளியானது ஐபிஎல்., தொடரின் முழு அட்டவணை!Mar 19, 2019, 05:10 PM IST


283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு 
டைம்ஸ் நவ், விஎம்ஆா் நடத்திய பிரமாண்ட கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு 
சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பான எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள்!

எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பாடல் வரிகள், தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பாக மாறியுள்ளது. 

MK Stalin: மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - சிறப்பம்சங்கள்! 
மாணவா்களுக்கான கல்விக் கடன் ரத்து, நீட் தோ்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கவா்ச்சிகர தகவல்களுடன் திமுக மக்களவைத் தோ்தலுக்கான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 

PMK: பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று திமுகவுடன் மோதவிட்ட அதிமுக - மக்களவைக்குள் செல்லுமா பாமக? 
கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை 7 தொகுதிகளில் பாமக எதிர்கொள்கிறது. 2009ல் நடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் திமுகவிடம் 5 தொகுதிகளையும், ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகளிடமும் பாமக இழந்தது. 

இதுக்கு தங்கபாலுவே பரவாயில்லை... பட்டாணி வளம் வளர்ச்சி தேர்தல் அறிக்கையில் காமெடி செய்த அதிமுக 
சென்னை : பல்வேறு தவறுகளுடன் அதிமுகஇன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. 

காா் ஓட்டுநா், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்த ஆலியா பட் 
தனது 26ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்ரூ.50 லட்சத்தில் கார் டிரைவர் மற்றும் உதவியாளருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். 

AIADMK Lok Sabha Manifesto: மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு 
சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் 17வது மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-வின் தேர்தல் அறிக்கையை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். 

திருச்சி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ரியோ ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா? 
பிரபல விஜே ரியோஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தைநடிகர் சிவகார்த்திகேயன் இயக்குகிறார். 

ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடும் போட்டிகள் அட்டவணை 
2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடா் வருகின்ற 23ம் தேதி தொடங்கும் நிலையில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: 4 பேருக்கும் ஏப்ரல் 2 வரை நீதிமன்ற காவல் 
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

CSK vs RCB IPL 2019: வெளியானது ஐபிஎல்., தொடரின் முழு அட்டவணை! 
2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடா் வருகின்ற 23ம் தேதி தொடங்கும் நிலையில் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான முழு அட்டவணை விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை ஐஆர்சிடிசி.,யில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு! 74 காலிபணியிடங்கள்!! 
சென்னை ஐஆர்சிடிசி.,யில் காலியாக உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சுவுக்கிதார் ஒரு திருடன்! ட்விட்டரின் மாபெரும் கருத்துக்கணிப்பில் முடிவு 
பிரதமர் நரேந்திர மோடி தன்னை காவல்காரன் என்று சொல்லிக்கொண்டு பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் மாபெரும் கருத்துக்கணிப்பு ஒன்றில் காவல்காரர்கள் எல்லாம் திருடர்கள்தான் என பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். 

நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் வழங்கிய லண்டன் நீதிமன்றம் 
நிரவ் மோடி மீதான முதல் சார்ஜ் ஷீட்டை லண்டன் உளவுத்துறையான என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் முதன்முறை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்டின் பரிந்துரையின்பேரில் தற்போது அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.

பாரிக்கர் மறைவிற்கு பின், நள்ளிரவில் பதவியேற்ற கோவா மாநிலத்தின் புதிய முதல்வர்! 
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகா் பாரிக்கல் உடல் நலக்குறைவால் உயிாிழந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பிரமோத் சாவந்த்(45) புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா். 

அண்ணனுக்கு ஜே! கம்பி எண்ணாமல் தப்பிய தம்பி அம்பானி நெகிழ்ச்சி 
எரிக்சன் நிறுவனத்திடம் ரூ.550 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் ஜெயிலுக்குப் போவதிலிருந்து காப்பாறிய அண்ணன் முகேஷ் அம்பானிக்கு தம்பி அனில் அம்பானி நன்றி கூறியுள்ளார். 

வாட்ஸ்ஆப்பில் சமயம் தமிழ்Subscribe

WEB TITLE:latest top news today march 19 2019 headlines from tamil nadu and india in tamil
(Tamil News from Samayam Tamil , TIL Network)

முக்கிய வார்த்தைகள்:

#முக்கியச் செய்திகள்#இன்றைய செய்திகள்#Todays Important#Tamil news today#Tamil news#Important news#breaking news

« முந்தைய

4வது முறை தேர்தலில் களமிறங்கும் சுயேட்சை; சேலத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

அடுத்த »

கள்ளு விற்பதை தமிழகத்தில் அனுமதிக்க கோரும் டிஎன்டிஎம் அமைப்பு

Quick Links :


DMDK Lok Sabha CandidatesPMK MP Candidates 2019AIADMK Lok Sabha CandidatesElection 2019 MemesSri ReddyAIADMK By Election CandidatesLok Sabha First Phase NominationsTamilrockers 2018 Download

EXPLORE TAMIL SAMAYAM

NEWS :

Tamil News Headlines India News Business News Automobile News Travel News Health News Latest News Tamil Tamil Nadu News Technology News

ENTERTAINMENT :

Tamil Cinema Tamil Movie Review Tamil Movies

SPORTS :

Sports News Cricket News

OTHER CATEGORY : 

Kitchen Corner Lifestyle Social Education News Tamil Jokes Spiritual Astrology Predictions Food Recipes Games App

OTHER LANGUAGES

EnglishHindiKannadaMalayalamTeluguMarathiBanglaLongwalks App

FOLLOW US ON


Copyright © 2019 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. For reprint rights : Times Syndication Service

Monday 18 March 2019

பெண்களின் பாதுகாப்பு டிப்ஸ்



பொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது என்ன?- சந்தேகம் உங்களின் தற்காப்பு

 

Published On: 18 Mar, 2019 02:41 PM 
Last Updated On: 18 Mar, 2019 02:42 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஈரக்குலை பதறவைக்கும் அளவுக்கு வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமின்றி உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. யார் பெற்ற பெண்ணோ நம்பிக்கை காட்டி இப்படி மோச வலையில் சிக்கி கதறுகிறதே என அந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மனம் கிடந்து அழும்.

சமூக வலைதளங்களுள் முக்கிய பங்குவகிக்கும் ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்களை குறிவைத்துஆசை வார்த்தைகள் கூறி, 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும் ஒரு கும்பலே பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி, பணம் கேட்டு மிரட்டுவதும் பணம் தர இயலவில்லை என்றால் அவர்களின் ஆசைக்கிணங்க வைப்பதும் அந்த கும்பலின் வாடிக்கை. கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்த கொடூரம் பொள்ளாச்சியில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. நினைத்தாலே தொண்டை அடைக்கும் அளவிற்கு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 5 ஆண்டுகளாகதான் சமூக வலைதளங்கள் பரவலாக எல்லோராலுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கையில் இந்த சம்பவம் ஃபேஸ்புக் மூலம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சி. 

கடந்த மாதம் 24ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வரூபம் எடுத்தது பொள்ளாச்சி வழக்கு. இந்த வழக்கில் முதற்கட்டமாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டது. 

நடந்தது என்ன?

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தோண்ட தோண்ட அதிரவைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சி அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில்தான் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில பிரச்னைகள் காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன் இந்த பண்ணை வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சிக்கு தனது குடும்பம் குடியேறியது. இது திருநாவுக்கரசுக்கு தனது பண்ணை வீட்டில் குற்றச்செயல்களை அங்கேற்ற வசதியாக அமைந்தது. 

திருநாவுக்கரசு கைதாகும் முந்தைய நாள், ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், என் உயிர்போனாலும் இதை நான் கூறுவேன் என கூறியிருந்தார். அதற்கு அடுத்த நாளே தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு காவல்துறையால் கைதானார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இச்சம்பவத்தில் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்டனர். மேலும், இதில் ஆளுங்கட்சியின் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பூதாகரமானவுடன் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவம் அடங்குவதற்குள் இதே போன்று ஒரு பயங்கரம் நாகையிலும் நடந்துள்ளது. கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சென்னையில் கார் ஓட்டுநராக பணியாற்றும் நாகையை சேர்ந்த சுந்தர் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பல பெண்களுடன் சுந்தர் எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவின. இவர் நாகையை சேர்ந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இருவரும் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பி தனது இச்சைக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் சுந்தர் பல்வேறு வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் எவ்வாறு இதில் விழிப்புணர்வுடன் இருப்பது என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சென்னை மனநல மருத்துவமனையின் டீன் பூர்ணசந்திரிகா பதில்கள் பகிர்ந்துகொண்டார்.

பெண்கள்  எவ்வாறான விழிப்புணர்வுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்?

தற்போது உள்ள சூழலில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதோர் அரிது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் இருந்து விலகுவது கடினம், விளக்கவும் தேவையில்லை. ஆனால் பயன்படுத்தும் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

முதலில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அதை முதலில் தவிர்க்க வேண்டும். யாரையும் எளிதில் நம்புவதும் அபாயம்; முகம் தெரியாதவர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதும் குற்றசெயல்களுக்கு வழிவகுக்கும்.

‘சந்தேகம் உங்களின் தற்காப்பு’ 

யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சந்தேகம் கொள்வது உங்களை தற்காத்து கொள்ள உதவும்.எனவே முகம் தெரிந்த உங்களின் நம்பக வட்டத்தை  மட்டும் சமூக வலைத்தளங்களில் வைத்துகொள்ளுங்கள். அந்த வரம்பை  தாண்டும்போதுதான் பிரச்னைக்கு தூண்டுகோளாகிறது. ஏதேனும் பிரச்னையில் பாதிக்கப்பட்டால் யாரேனும் மிரட்டும் பட்சத்தில் பயப்படாமல் இருக்கவேண்டும். அது அந்த கொடூரர்களை பலவீனமனமடைய செய்யும் முதல் உக்தி ஆகும்.  

பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன? 

பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், முதலில் அவர்கள் செல்போனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். எதை அதிகம் பார்க்கிறார்கள், நட்பு வட்டாரம் குறித்து அறிந்துகொள்வது அவசியம். கூடா நட்பும் கேடாய் விளையும் என்பதை இளம்பெண்கள் உணரவேண்டும். எனவே, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் கவனிக்கப்பட வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சரிசமமாக உட்கார்ந்து எதார்த்தங்களையும் உண்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எது அபாயம், எதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் அறிவுரைக்கவேண்டும். தெரியாத நபர் அணுகினால் என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…

முக்கியமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களால் அதிலிருந்து மீண்டுவர இயலும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டியது மிகமிக அவசியம். அப்பெண்கள் மனநல மருத்துவரை அணுகுவதும் சரியாக இருக்கும்.

இந்த சம்பவம் வெளிவர காரணமாக இருந்த பெண்ணைதான் முதலில் பாராட்ட வேண்டும். துணிச்சலாக முன்வந்து வழக்கு தொடுத்தது பெரிதும் பாராட்டுக்குரியது. இதற்கு மேலான முழுமுதற் செயல், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் அத்தனையும் வெளிவராமல் ரகசியம் காக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் குறித்த பாடங்களும் அவசியமாக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சட்டம் சொல்வது என்ன ?

எவ்வளவுதான் விழிப்புணர்வை மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தற்காப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் பெண்கள் தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது. 

இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. இதில் ஐபிசி (IPC)பிரிவு 100ல் எதிர்தரப்பினர் நம் உடன்பாடு இன்றி பாலியல் ரீதியாக தாக்கும் போதும், இயற்கைக்கு மாறான முறையில் நம்மிடம் இச்சையை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சீண்டும் போதும், நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், நம்மை தற்காத்துக் கொள்ளும் போது, எதிரிக்கு எவ்விதமான அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் அவை, குற்றமாக கருதப்படாது என்பன உள்ளிட்ட சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை முக்கியத்துவமாக கருதவேண்டும்.

*RH  NEWS  MEDIA*

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...