🔵⚪ *சேலம் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு:*
*இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், சித்தாந்தங்கள் உள்ளதாக திமுக - காங்கிரஸ் கூறுகிறது.*
*தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ் ஆள வேண்டும் என பாஜக விரும்புகிறது. மோடியின் பிரதமர் அலுவலகம் தமிழகத்தை ஆள நினைக்கிறது.*
*கலைஞர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். கலைஞரின் நினைவிடம் அமைப்பதில் அநீதி இழைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறினார். இது கலைஞருக்கு இழைக்கப்பட்ட அவமானம் கிடையாது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம்.*
*தமிழர்களையும், தமிழ் மக்களையும் மதிக்க தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.*
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கண்ணாடி அறைக்குள் அமர்ந்து தயாரிக்கப்பட்டது இல்ல அது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க கூடிய அறிக்கை.*
*நீட் தேர்வில் மாணவி அனிதா இறந்தது போல, வேறு எந்த மாணவியும் இறக்க கூடாது என்பதில் காங் தெளிவாக உள்ளது.*
*காங் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா? இல்லையா ? என்பதை மாநில அரசின் விருப்பத்திற்கு விட்டுவிடுவோம்.*
*ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி நடவடிக்கை மூலம் திருப்பூர் தொழில் துறையையும், காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியையும் அழித்து விட்டார் மோடி.*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன் இது தேவையா என யாரிடமாவது கலந்து பேசினாரா மோடி?.*
*நாங்கள் கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே தீர்வுகளை எட்ட முடியும் என நம்புகிறோம்.*
*கோடிக்கணக்கான பணத்தை அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. 15 கோடீஸ்வரர்களுக்காக ஆட்சியை நடத்துகிறார் மோடி.*
*டெல்லியில் ஆடையின்றி போராடிய விவசாயிகளை அழைத்து பேசாத மோடி, அனில் அம்பானிக்கும், விஜய் மல்லையா, நீரவ்மோடிக்கும் அன்பை வழங்கி அமர்ந்து பேசுகிறார் மோடி.*
*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிய வழி என்ற முறையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.*
No comments:
Post a Comment